Home இலங்கை சமூகம் பதுளையில் கோர விபத்து! நால்வர் பலி : மூவர் படுகாயம்

பதுளையில் கோர விபத்து! நால்வர் பலி : மூவர் படுகாயம்

0

பதுளை (Badulla) – சொரணாதோட்டை பகுதியில் பாரவூர்தியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (05) மதியம் 12 மணியளவில் வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், மொனராகலையில் இருந்து வீதிகளில் பேருந்து தரிப்பிடங்களை அமைப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version