மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா, லக்சபான தோட்ட – வாழமலை பிரிவில் நேற்று(26) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நால்வர் பாதிப்பு
தேயிலை கொழுந்து
கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
