கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து இன்றைய
தினம் (03.11.2025) கைதாகியுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
