Home இலங்கை சமூகம் திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

0

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள்
எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடம் பேசிய போது
உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்களுடனான நேற்று (16) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

திருகோணமலை பொது வைத்தியசாலை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குச்சவெளி பிரதேச செயலக
பகுதியில் 10 ஆயிரத்து 435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விவசாய
நிலங்களுக்கான குளங்கள், வாய்க்கால்கள் காணப்படுகிறது.

இது தொடர்பில்
ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான
தீர்வுகளுக்காக முயற்சிக்கின்றேன்.

மேலும் திருகோணமலையில் 500 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றதுடன் திருகோணமலை பொது
வைத்தியசாலையில்100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது. இதனால்
சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன.

முதல் நாடாளுமன்ற பிரதிநிதி

வெளிநாடுகளில் வைத்தியர்கள்
இல்லாமல் அறுவை சிகிச்சை இடம்பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள்
உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு
உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி
ஒன்றினைந்து செயற்படுவோம்.

1976இன் பின்னர் கட்டுக்குளப் பகுதிக்கு நானே முதல் நாடாளுமன்ற பிரதிநிதி. புல்மோட்டை, திரியாய், குச்சவெளி என்ற பிரதேச
பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன் இதற்கான
ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெப்போலியன்
கூறியது போன்று “பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக
இருப்பது சிறந்தது” என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பில் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட
பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version