Home இலங்கை குற்றம் யாழில் ஐந்து பேர் அதிரடியாக கைது

யாழில் ஐந்து பேர் அதிரடியாக கைது

0

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும்,
2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும்
80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version