Home இலங்கை குற்றம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண் உட்பட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண் உட்பட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0

போலி விசாக்களை பயன்படுத்தி இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு பயணிக்க தயாரான ஆறு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களில் 35 வயதான பெண்ணும், ஏனையவர்கள் 33 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் பிரஜைகள்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த அவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கைக்கு வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய தயாரான பல பங்களாதேஷ் பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version