யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (21) யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குததந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலமையில்
நடைபெற்றுள்ளது.
இதன்போது, தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை
இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வு
அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, சுடரேற்றல், மெழுகுவர்த்திகளைப் பற்ற வைத்து
அஞ்சலிக்கப்பட்டது.
இதன்போது விசேட அதிரடிப்படை
மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
