Home இலங்கை சமூகம் நாட்டில் ஏற்படும் 70 சதவீத மரணங்களுக்கு இது தான் காரணம் : அமைச்சின் அறிக்கை

நாட்டில் ஏற்படும் 70 சதவீத மரணங்களுக்கு இது தான் காரணம் : அமைச்சின் அறிக்கை

0

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமான மரணங்களுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த மரணங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் (Ministry of Health) தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் (Samiddhi Samarakoon) கூறுகையில்,“ 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

மருந்துகள் பயன்படுத்தவில்லை

குறித்த ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை“ என சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/QIyPdQf7FfE

NO COMMENTS

Exit mobile version