Home இலங்கை குற்றம் ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரும் நேற்று (04.12.2024) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பின்னர் மீண்டும் நீதிமன்றங்களுக்கு முன்னிலையாகாமல் வந்தவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

விசேட சுற்றிவளைப்பு

இவ்வாறு தலைமறைவாகி வந்தவர்களை தேடி கண்டுபிடிக்கும் விசேட சுற்றிவளைப்பு நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/8-people-arrested-in-a-special-police-raid-1733407901

NO COMMENTS

Exit mobile version