பொகவந்தலாவ – கெக்கஸ்வோல்ட் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(18) மதியம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில்
ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 7 பேர் சிகிச்சைகளின் பின்
வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி
சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
