பொகவந்தலாவை கியூ பிரதேசத்தில் 8 வயதுடைய சிறுவன் ஒருவர் குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது இன்று(3) மாலை இடம்பெற்றுள்ளது.
சிறுவன் பலி
வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு வெளியில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்த சிறுவனை பெற்றோர் உள்ளிட்டோர் மீட்டு எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கியூ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 3ல் கல்வி பயிலும் மாணவராவார்.
