Home இலங்கை சமூகம் புத்தளத்தில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்

புத்தளத்தில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்

0

Courtesy: Chandana

புத்தளம் – கற்பிட்டி,(Puttalam – Kalpitiya) கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு நேற்று (02.05.2024) அதிகாலை, பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்ய – உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

முதற்கட்ட விசாரணை

வறுமையினால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக தாய் தனது குழந்தையை இவ்வாறு கிணற்றில் வீசியுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான், விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம்: நகை கொள்வனவு செய்பவர்களுக்கான தகவல்

யாழ். அச்சுவேலியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version