Home இலங்கை குற்றம் 22 மாணவர்கள் இணைந்த குழுவினால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை

22 மாணவர்கள் இணைந்த குழுவினால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை

0

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுத்தியதாக
தனமல்வில பொலிஸ் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வாக்குமூலம்

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட ஏனையோருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version