யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை ஒரு தொகை கஞ்சா
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் பலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட
நடவடிக்கையில் குறித்த பகுதியில் பழைய வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்படிருந்த
நிலையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
75 கிலோ கிராமிற்கும் அதிகமான..
எவ்வாறாயினும் குறித்த நடவடிக்கையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட 75 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் வல்வெட்டித்துறை
பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை
பொலிஸார் முன்னெடுத்து வருகி்ன்றனர்.
