Home இலங்கை சமூகம் பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

0

எல்ல (Ella) – வெல்லவாய பிரதான வீதியில் இராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று அருகிலுள்ள மலையில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (04) காலை பதுளையில் இருந்து மாகும்புர வரை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் சாரதி பேருந்தை மலையில் மோதச் செய்து நிறுத்தியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

அவ்வாறு செய்யவில்லையென்றால் பேருந்து செங்குத்தான பாறையில் உருண்டு விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து காரணமாக பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version