Home இலங்கை சமூகம் பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி: தாய் எடுத்த விபரீத முடிவு

பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி: தாய் எடுத்த விபரீத முடிவு

0

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவமொன்று யாழில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.

பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொள்வேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததுள்ளது.

இந்நிலையில், அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (19) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version