Home இலங்கை சமூகம் லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் திடீர் உயிரிழப்பு

லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் திடீர் உயிரிழப்பு

0

லண்டனில் (London) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்த நபர் ஒருவர் மயக்கமுற்றமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்த 56 வயதான கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 16 ஆம் திகதி லண்டனில் இருந்து கொழும்பிற்கு (Colombo) வருகை தந்து கொழும்பிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி வந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

பேருந்து யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த பின்னர் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்காத காரணத்தினால் அவதானித்த நடத்துநர் அவரை எழுப்புவதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது அவர் மயக்க நிலையில் காணப்பட்டமையினால், 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (27) காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/a-person-visit-from-london-dies-suddenly-in-jaffna-1730085813

NO COMMENTS

Exit mobile version