Home இலங்கை சமூகம் அரிசி தட்டுப்பாடு குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரிசி தட்டுப்பாடு குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

இலங்கையில் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் (Colombo) இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க (M.P.N.M. Wickramasinghe) இதனைக் குறிப்பிட்டார்.

அரிசி விலை

அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்ற வகையில் சந்தையில் அரிசி விலையைத் தீர்மானிக்கும் சக்தியை அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஒரு போதும் வழங்காது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த நாட்களில் கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலையில் அரிசி சந்தையில் விற்பனை செய்யப்பட்டமையால் அதற்குத் தட்டுப்பாடு நிலவியதாகவும் இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர் என விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரை

இந்த நிலையில், தற்போது சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளை அரசாங்கம் சேகரித்திருந்ததாக குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள அரிசி ஆலைகளில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்புக்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version