Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் எடுத்த விபரீத முடிவு

தமிழர் பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் எடுத்த விபரீத முடிவு

0

அம்பாறை (Ampara) – பதியத்தலாவ காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தன்னை தானேன துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (06.05.2025) இடம்பெற்றுள்ளது.

பிபிலையைச் சேர்ந்த துனுகர முதியன்சேலாகே தனபால என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான இன்று காலை கடமையில் இருந்துள்ள நிலையில் அவரது ரி.56 ரக (T56) துப்பாக்கியால் தன்னைத தனே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பதியத்தலாவ வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version