Home இலங்கை சமூகம் யாழில் நுரையீரலில் கிருமி தாக்கி உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

யாழில் நுரையீரலில் கிருமி தாக்கி உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இரண்டு மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த தருண்
பிரதீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு காய்ச்சலும் சளியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டது.

சிகிச்சை அளிப்பு  

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை
உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

நுரையீரலில் கிருமி தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக
மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version