Home இலங்கை அரசியல் இலங்கைக்குள் நுழைந்த முக்கிய இந்திய புலனாய்வு துறை அதிகாரியின் எச்சரிக்கை

இலங்கைக்குள் நுழைந்த முக்கிய இந்திய புலனாய்வு துறை அதிகாரியின் எச்சரிக்கை

0

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் இலங்கை விஜயம் தமிழ்ப் பொதுவேட்பாளரின் விடயத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்பின் ஒரு ஆணிவேராகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திகழ்வதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்களின் விஜயங்களுக்கும் தற்போது விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் விஜயத்திற்கும் பாரிய ஒரு வித்தியாசம் காணப்படுவதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த அதிகாரியின் விஜயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் எச்சரிக்கைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,

Source: https://tamilwin.com/article/a-warning-from-indian-intelligence-official-visit-1725467505

NO COMMENTS

Exit mobile version