Home இலங்கை அரசியல் மொட்டுக்கட்சியின் தீர்மானங்களை மீறுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொட்டுக்கட்சியின் தீர்மானங்களை மீறுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்

இந்தப் பின்னணியில், அதற்கெதிராக கட்சிக்கு தெரியாமல் அல்லது நேரடியாக செயற்பட்டால் கட்சியில் அந்த உறுப்பினர் எந்த பதவியை வகித்தாலும் அந்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நபரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும்“ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-warning-to-slpp-members-sagara-kariyawasam-1725448454

NO COMMENTS

Exit mobile version