Home இலங்கை சமூகம் யாழில் வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27.10.2024) இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் கிழக்கு
பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

மன விரக்தி

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியாக வாசித்து வந்த குறித்த பெண் மன விரக்தியில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version