Home இலங்கை சமூகம் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ் – புத்தூர் பகுதியில் உள்ள ஆலயத்தில்
இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன்
வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இளைஞர் இவ்வாறான நிலையில் காணப்படுவதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச
வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து
விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 27 வயதான செல்வச்சந்திரன் மிமோஜன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம்
காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் – மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version