Home சினிமா நான் பேசாமல் இருப்பது ஏன்.. ஜெயம் ரவியை தாக்கி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை

நான் பேசாமல் இருப்பது ஏன்.. ஜெயம் ரவியை தாக்கி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை

0

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

முதலில் ஜெயம் ரவி விவாகரத்து பற்றி அறிவித்த நிலையில் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது, ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவு இது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் ஜெயம் ரவியை சந்தித்து பேச பல முறை முயற்சித்தும் முடியவில்லை என அவர் கூறி இருந்தார்.

அதன் பின் ஜெயம் ரவியை ஆர்த்தி கொடுமைப்படுத்தியதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது. ஜெயம் ரவிக்கு தனியாக வங்கி கணக்கு கூட இல்லை, அனைத்துக்கும் மனைவி இடம் தான் வாங்க வேண்டும், சின்ன செலவுக்கு கூட அசிங்கப்படுத்துவார். அனைத்து சொத்தும் இருவரது பெயரில் தான் இருக்கிறது.

மேலும் ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து தயாரித்த படங்கள் பெரிய நஷ்டம் என கணக்கு காட்டினார், ஆனால் விசாரித்தால் அவை நஷ்டம் எல்லாம் இல்லை எனவும் தகவல் வந்தது.

ஆர்த்தி அறிக்கை

இந்நிலையில் ஆர்த்தி தற்போது ஒரு புது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். “நான் அமைதியாக இருப்பது என்னுடைய குற்ற உணர்ச்சி அல்லது பலவீனத்தால் அல்ல. உண்மையை மறைத்து, என்னை தவறாக சித்தரித்து காட்ட சிலர் செய்யும் முயற்சிகளுக்கு கண்ணியமாக பதில் அளிக்காமல் இருந்தேன். நீதித்துறை உண்மையை வெளிக்கொண்டு வரும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

“நான் முந்தைய அறிக்கையில் சொன்ன விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. விவாகரத்து பற்றி பேச்சுவார்த்தையில் இருந்தது எனக்கு தெரியாது என கூறவில்லை. அந்த விவாகரத்து அறிவிப்பு இருவரது ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது என சொல்வது பொய், அது பற்றி எனக்கு தெரியாது என்று தான் கூறினேன்.”

“இதுபற்றி தனியாக பேச நான் தற்போதும் தயாராக இருக்கிறேன். தற்போது வரை அது மறுக்கப்பட்டு வருகிறது.”

“எனக்கு திருமணம் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. யாருடைய புகழையும் கெடுக்கும் வகையில் பொதுவெளியில் நான் பேச மாட்டேன். குடும்பத்தின் நலன் மீது தான் என்னுடைய ஒரே கவனம் இருக்கிறது. என்னை கடவுள் அருள் வழிநடத்தும் என நம்புகிறேன்” என ஆர்த்தி கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version