Home இலங்கை சமூகம் காட்டு யானையால் நேர்ந்த விபத்து : முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்தில் பலி!

காட்டு யானையால் நேர்ந்த விபத்து : முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்தில் பலி!

0

அனுராதபுரம் (Anuradhapura) வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டியும் வானும் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (30) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் (Puttalam) நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வீதியைக் கடந்த காட்டு யானையைக் கண்டு, திரும்ப முற்பட்ட போது, ​​புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வான் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி இராஜாங்கனை சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த (50) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானைகளின் நடமாட்டம்

இதேவேளை குறித்த வீதியினூடாக தினமும் காட்டு யானைகள் நடமாடுவதால் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் இந்த வீதியில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் இடம்பெற்றதுடன் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version