Home இலங்கை சமூகம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் பரிதாபமாக 19 வயது இளைஞன் பலி

மோட்டார் சைக்கிளில் மோதியதில் பரிதாபமாக 19 வயது இளைஞன் பலி

0

மொரந்துடுவ பண்டாரகம வீதியின் தெல்கட சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 19 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ காவல்துயைினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (14) மொரந்துடுவ பண்டாரகம வீதியின் தெல்கட சந்தியில் பேருந்து தரிப்பிடத்தில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், கொலன்னாவை சங்கீத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த உதவி சமையற்காரராக பணியாற்றிய மீபே ஆராச்சிகே தெவ்நிஜாடில்மெத் என்ற இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தனியார் உணவு உற்பத்தி நிறுவனமொன்றில் பணிபுரியும் குறித்த இளைஞன், பாணந்துறை பிரதேசத்தில் பிறந்தநாள் விழாவொன்றில் உதவி சமையலாளராக கடமையாற்றிவிட்டு வீட்டுக்குச் செல்லாத போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version