Home இலங்கை சமூகம் திருகோணமலையில் விபத்து! இளைஞரொருவர் மரணம்

திருகோணமலையில் விபத்து! இளைஞரொருவர் மரணம்

0

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

குறித்த விபத்தானது இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய
இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

விசாரணை

திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து,
கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று
கொண்டிருந்தபோது, இராணுவ லோரி ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியான இளைஞன், திருமணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை எனவும் தெரிய
வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version