Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பொலிஸாரின் செயல்

கிளிநொச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பொலிஸாரின் செயல்

0

கிளிநொச்சி ஏ-09 வீதி பளைப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இன்று (14)
காலை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில் பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி ஏ.09 வீதியின் இத்தாவில் முகமாலை மற்றும் உமையாள்புரம் ஆகிய
பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலைமை
காணப்படுகிறது.

இதனால் தினமும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பொறுப்பான அதிகாரி

இந்நிலையில், இன்றைய தினம் காலை முகமாலை பகுதியில் இருந்து பளை மத்திய கல்லூரிக்கு
செல்லும் மாணவர்களை நீண்ட நேரமாகியும் அரச பேருந்துகள் எதுவும் ஏற்றி செல்லாத
நிலையில், வீதியில் காத்திருந்த மாணவர்களை பளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று
பாடசாலையில் விட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version