பாவா லட்சுமணன்
தமிழ் சினிமாவில் இடம்பெற்ற சில முக்கியமான காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடம் ரீச் பெற்றவர் பாவா லக்ஷ்மணன். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.
இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தான் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஆனந்தம் படத்தில் அப்பாஸ் செய்த விஷயத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
பாவா லட்சுமணன் பேட்டி
அதில், “ஆனந்தம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது பெரிய மெகா ஸ்டாரே 6:30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டார்.
ஆனால், அப்பாஸ் 8 மணி வரை வரவில்லை. அவரிடம் ‘கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க’ என்று நான் கேட்டேன். அதற்கு அப்படித்தான் வர முடியும் என்று கூறினார். அந்த பதிலை கேட்டு நான் அவரை அடிக்கவே சென்று விட்டேன்” என்று கூறியுள்ளார்.
Source: https://cineulagam.com/article/actor-bava-talk-about-shooting-spot-1733824709
