Home சினிமா முதல் முறை அபாஷ்ன், 2வது முறை டியூபில் குழந்தை- சோகத்தை தாண்டி சந்தோஷ செய்தி சொன்ன...

முதல் முறை அபாஷ்ன், 2வது முறை டியூபில் குழந்தை- சோகத்தை தாண்டி சந்தோஷ செய்தி சொன்ன சீரியல் நடிகை

0

நடிகை ஜுலி

சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.

ஆனால் நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கும் பிரச்சனைகள் உள்ளது என தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நிறைய பிரபலங்கள் பகிர்ந்துள்ளார்கள். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜுலி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார், ஜீ தமிழில் சத்யா, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். பிஸியான நடித்து வந்த திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

குழந்தை

இந்த நிலையில் தான் நடிகை ஜுலி தனது சினிமா பயணம், வாழ்க்கை குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர் அந்த பேட்டியில், எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது, முதலில் கர்ப்பமாக இருந்த போது அபார்ட் ஆகிவிட்டது.

ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் விஜய்யின் கில்லி- இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை ஆனதா?

இரண்டாவது முறை கர்ப்பமான போது, கர்ப்பப்பை ட்யூபில் குழந்தை இருப்பதால் அதை அபார்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை. 3வது முறை கர்ப்பமான போது அழுதுவிட்டோம்.

அதோடு சிலர் வயதாகிவிட்டது, இதற்கு மேல் எப்படி என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு 42 வயதாகிறது, ட்ரீட்மென்ட் மூலமாக தான் இப்ப குழந்தை பிறக்கப் போகிறது என சந்தோஷமாக கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version