Home இலங்கை சமூகம் நிந்தவூரில் அதிகரிக்கும் திருட்டு: காவல்துறை விடுத்த கோரிக்கை!

நிந்தவூரில் அதிகரிக்கும் திருட்டு: காவல்துறை விடுத்த கோரிக்கை!

0

நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு நிந்தவூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட அறிவித்தலொன்றை விடுத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

குற்றங்களைத் தடுக்க குறித்த அறிவித்தலில் உள்ள அம்சங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களிடம் கோரிக்கை

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “பல்வேறு நபர்கள் உங்கள் வீட்டையும் சொத்துகளையும் திருடுவதைத் தடுக்க பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு
உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்களை நிறுத்தும் போது வாகனத்தின் சாவியை உங்களுடன் வைத்திருப்பதை உறுதி செய்வதுடன் அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்.

பசுக்கள் மற்றும் பிற கால்நடைகளைப் பாதுகாப்பாக வேலியிட்டு அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கவும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி சாவியை உங்களுடன் வைத்திருங்கள் அவற்றை ஒரு போதும் பாதுகாப்பற்ற இடங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்.

தங்கப் பொருட்களை சேமித்து வைக்கும் போதும் கொண்டு செல்லும் போதும் கவனமாக இருங்கள் குறிப்பாக இந்த நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் நீங்கள் வீதியில் நடந்து
செல்லும் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களா அல்லது உங்களை கடந்து செல்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது வந்து சுற்றித் திரிந்தால் அவர்கள் வரும் வாகனங்களின் இலக்க தகட்டு எண்கள் அவர்கள் வரும் திகதிகள் மற்றும் நேரங்களை குறித்துக் கொள்வது அல்லது அந்தச் சந்தர்ப்பங்களை அவர்களுக்குத் தெரியாமல் உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் காணொளி எடுப்பது குற்றங்களைத் தடுக்க நீங்கள் வழங்கக் கூடிய ஒரு சிறந்த சேவையாகும்.

அவசர எண்கள்

பொது மக்களாகிய உங்களிடம் தொழில் பெற்றுத் தருவதாக அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பவதாக கூறி சில நபர்கள் உங்களிடம் பணம் வாங்கக் கூடும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வோண்டாம்.

ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளின் போது 067-2250147, 071-8592953 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உடனடியாக நிந்தவுர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”என அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version