Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மட்டக்களப்பு இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மட்டக்களப்பு இளைஞன் கைது

0

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

விமான நிலைய பொலிஸார் விசாரணை

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இன்று வியாழக்கிழமை (19) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 25 சிகரெட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

 

NO COMMENTS

Exit mobile version