Home இலங்கை கல்வி க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்திற்கான கால எல்லை

பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இன்று (05.06.2024) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைப் பரீட்சாத்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/al-exam-results-in-sri-lanka-1717571329

NO COMMENTS

Exit mobile version