Home இலங்கை கல்வி உயர்தர மாணவர்களுக்கு விசாரணை – பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை

உயர்தர மாணவர்களுக்கு விசாரணை – பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை

0

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை (Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு கொழும்பில் நடைபெற இருந்த விசாரணை திருகோணமலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroob) பரீட்சை ஆணையாளருக்கு (Commissioner of Examinations) நன்றி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மாணவிகளின் கொழும்பு விசாரணை

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரை பரீட்சை தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த விடயத்தை இம்ரான் எம் பி பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனை செவி மடுத்த ஆணையாளர் குறித்த மாணவிகளின் கொழும்பு விசாரணையை இரத்து செய்து அதனை திருகோணமலையில் நடத்த ஒழுங்கு செய்துள்ளார்.

எனினும், விசாரணைக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் விபரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version