Home இலங்கை கல்வி உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, தங்கள் அனுமதி அட்டையில் திருத்தங்கள் தேவைப்படும் எந்தவொரு பரீட்சார்த்தியும் உடனடியாக திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகள் 

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்க உள்ளது.

மொத்தம் 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 2,365 பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், பரீட்சையை சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/all-gce-al-exam-admissions-dispatched-1762332711

NO COMMENTS

Exit mobile version