Home இலங்கை கல்வி கல்வித் திட்டத்தில் மாற்றம்: புதிய முடிவு தொடர்பில் அறிவிப்பு

கல்வித் திட்டத்தில் மாற்றம்: புதிய முடிவு தொடர்பில் அறிவிப்பு

0

குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றமானது பாடசாலைகளில் தரம் 6ஆம் தரம் முதல் 8ஆம் தரம் வரையான பாடவிதானங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி மறுசீரமைப்பின் போது க.பொ.த சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்க்கிறோம்.

மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கம்

அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகது.

ஒழுக்கமான சமூகத்திற்காக மாணவர்கள் சட்டம் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version