Home இலங்கை சமூகம் யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி: தன்னார்வாளர்களின் நெகிழ்ச்சி செயல்

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி: தன்னார்வாளர்களின் நெகிழ்ச்சி செயல்

0

யாழ்ப்பாணம் (Jaffna) வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியை தன்னார்வ ரீதியாக முன்வந்து சிலர் சுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகமானது கவனிபாரற்று கிடப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது தன்னார்வ ரீதியாக முன்வந்த சிலர் அந்த பகுதியில் வளர்ந்திருந்த புற்களை வெட்டி சுத்தம் செய்துள்ளனர்.

உலக தமிழாராய்ச்சி மாநாடு

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்கள் மனதில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே இந்த நினைவேந்தல் தூபியானது அமைக்கப்பெற்றது.

நினைவேந்தல் தூபி 

இவ்வாறு சிறப்புப்பெற்ற இந்த தூபி பராமரிக்கபடாமல் இருந்ததால் குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கமை தன்னார்வ ரீதியாக முன்வந்து சிலர் சுத்தப்படுத்தியுள்ளனர் .குறித்த பகுதியை சுத்தம் செய்தவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version