Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி!

கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி!

0

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அனுமதி சீட்டு

தற்போது ஒரு நாளைக்கு ஆயிரம் அனுமதி சீட்டுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள காரணத்தால் கடவுசீட்டுக்கான வரிசை குறைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

 

NO COMMENTS

Exit mobile version