Home இலங்கை சமூகம் யாழ்.வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைக்கைதி: தொடரும் விசாரணை

யாழ்.வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைக்கைதி: தொடரும் விசாரணை

0

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த 42 வயதான கே. புஷ்பா என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

மேலும், சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சூரியபண்டார மேலதிக விசாரணைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் படி, தலைமைப் காவல்துறை பரிசோதகர் சாம்லி பலிஹேன, யாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி காவல்துறை பரிசோதகர் இந்திக்க அபேகுணசேகர ஆகியோரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version