Home இலங்கை சமூகம் தியவன்ன ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் விசாரணை

தியவன்ன ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் விசாரணை

0

கொழும்பு (Colombo) – தியவன்ன ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

திவான்னாவ ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகிலேயே இன்று (20.07.2024) காலை நபர் ஒருவரால் இந்த சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசாரணை 

இதற்கமைய, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 60 அல்லது 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version