Home முக்கியச் செய்திகள் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் : வீட்டிற்கே வரப்போகும் சேவைகள்

வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் : வீட்டிற்கே வரப்போகும் சேவைகள்

0

நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் மோட்டார் வாகன துணை ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படுவார் என்று மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்காக கொழும்புக்கு வராமல் தங்கள் சொந்த மாகாணத்தில் சேவைகளை வழங்குவதை எளிதாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

 விரைவில் 25மாவட்டங்களுக்கும் திறமையான சேவை

 10 மாவட்டங்களில் பணிகள் ஏற்கனவே ஒன்லைனில் நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில், மற்ற 15 மாவட்டங்கள் இணைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட பிறகு, 25 மாவட்டங்களிலிருந்தும் தரவுகள் ஒரே நேரத்தில் ஒன்லைனில் பெறப்பட்டு மக்களுக்கு திறமையான சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீட்டில் இருந்தவாறே கிடைக்கப்போகும் சேவை

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 25 மாவட்டங்களும் ஒன்லைனில் சேவைகளை வழங்கும் நிலையில் இருக்கும் என்று அவர் கூறினார்.

இதேபோல், எதிர்காலத்தில் “இ-மோட்டாரிங்” திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மோட்டார் வாகனம் தொடர்பான அனைத்து சேவைகளும் வீட்டிலிருந்தே கிடைக்கும் என்றும், இதற்கு குறுகிய காலம் எடுக்கும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version