Home இலங்கை சமூகம் யாழில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு

யாழில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு

0

யாழ். (Jaffna) மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும்
ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இக்கலந்துரையாடலானது, இன்று (13.09.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. 

விசேட கலந்துரையாடல் 

இதன்போது, யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல்
முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாகவும் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும்
நிலையங்கள் மற்றும் நிறைவுபெற்ற அஞ்சல் வாக்களிப்பின் விபரங்கள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவின் சர்வதேச
கண்காணிப்பாளர் ஹசன் மொகமட் மற்றும் எஸ். கலாராஜ் ஆகியோர் கலந்து
கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version