Home இலங்கை லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போதைய போர் சூழ்நிலை

இந்தநிலையில், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் விழிப்புடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய போர் சூழ்நிலையால் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version