Home இலங்கை சமூகம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மற்றுமொரு நடைமுறை

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மற்றுமொரு நடைமுறை

0

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து
பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர்
தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத்
தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும்
குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த
கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி
செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version