Home சினிமா அந்த வதந்தியால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. ஷாக்கிங் தகவல்

அந்த வதந்தியால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. ஷாக்கிங் தகவல்

0

அனுபமா பரமேஸ்வரன்

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்தார். தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த ஆண்டு டிராகன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.

அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளிப்படையாக பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

5 நாட்களில் Lokah படம் உலகளவில் செய்துள்ள சென்சேஷனல் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நடிகை ஓபன் டாக்

இதில், “ரங்கஸ்தலம் படத்திற்காக இயக்குநர் சுகுமார் சார் என்னை அணுகினார். நான் அப்படத்தில் நடிக்க சரி என கூறி, தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் திடீரென எனக்கு பதிலாக வேறொரு நடிகையை கமிட் செய்துவிட்டார்கள்”.

“ஆனால், நான்தான் அந்த படத்தை நிராகரித்ததாக மீடியாவில் எல்லாம் வதந்திகள் பரவியது. இதனால் ஆறு மாதங்கள் நான் வேலை இல்லாமல் இருந்தேன்” என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version