நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலை தொடர்ந்து, பல்வேறு நிவாரண நடவடிக்கைககள் மூலம் இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அதேவேளை, அநுர அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
டிட்வா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தார்.
இவ்வாறான நிலையில், குறித்த பேரனர்த்தத்தால் மலையக பகுதிகளில் மிக மோசமான பாதிப்புக்கள் பதிவாகியிருக்கும் நிலையில் வடக்கு – கிழக்கில் அதிக பாதிப்புக்கள் இருப்பதாக பொய்யாக தெரிவிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு வரும் அதேவேளை, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தகவல்களை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
