Home இலங்கை அரசியல் புலம்பெயர் அமைப்புக்களை துாக்கி எறிந்த அநுர அரசு

புலம்பெயர் அமைப்புக்களை துாக்கி எறிந்த அநுர அரசு

0

புலம்பெயர் அமைப்புக்களை ஒரு பொருட்டாகவும் கருத்தில் எடுக்காமலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தூக்கி எறிந்துள்ளதாக பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களின் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு.

அத்தோடு, இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் காணமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுரவின் நடவடிக்கை, சர்வதேச நாடுகளுடனான உடன்பாடு, தமிழ் மக்களின் அரசியல் களம் மற்றும் புலம்பெயர் அமைப்பாளர்கள் எதிர்நோக்க கூடிய அரசியல் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/Hmfw4SvXIv8

NO COMMENTS

Exit mobile version