Home இலங்கை கல்வி கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்: ஜனாதிபதி அநுர

கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்: ஜனாதிபதி அநுர

0

தற்போதைய அரசாங்கம் நாட்டின் கல்வி துறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி, தம்புள்ளை ரஜமகா விகாரையில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “சட்டத்தின் மூலம் மாத்திரம் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அங்கு மதத் தத்துவத்திற்கு ஒரு பாரிய சமூக வகிபாகம் இருக்கின்றது.

அரசாங்க நடவடிக்கை

கிராமத்தின் விகாராதிபதி உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு அந்தப் பணியில் முதன்மையான பொறுப்பு உள்ளது.

அத்தோடு, நாட்டிற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் அறிவார்ந்த மற்றும் நல்லொழுக்கங்களுடன் கூடிய எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டும்.

அதேபோன்று, எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்ட வகையில் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/anura-gov-will-bring-changes-to-education-sector-1745591493

NO COMMENTS

Exit mobile version