தமிழ்நாட்டில் (Tamil nadu) இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
திருமண பதிவு
அதன்படி, 898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய எதிர்வரும் 26ஆம் திகதியன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இவற்றை விசேட திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/apply-for-marriage-registration-in-tamil-nadu-1752888219
